Monday, August 30, 2010

தேவை நல்ல தலைவர்

ஒரு அரசியல் தலைவர் சொல்லும் கருத்துக்கள் நல்லதாக இருந்தாலும், இன்றைய சூழலில் அது எடுபடாது. ஏனென்றால் நல்லது சொல்பவர்க்கு credibility மிகவும் அவசியம். இன்றைய அரசியல் தலைவர்களிடம் அது இல்லை. அதனால் அவர்கள் சொல்வதை நடுநிலையான மக்கள் நம்ப தயாராக இல்லை. எல்லா தலைவர்களும் தங்கள் சுயநலத்திற்காக தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் நம் மக்கள். தமிழகத்துக்கு இன்று அவசியம் தேவை காமராஜர் போன்ற தலைவர் தான். தமிழ் நாடு காத்து நிற்கிறது அத்தகைய தலைவருக்கு. கிடைப்பாரா?

No comments:

Post a Comment